திருகோணமலையில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் காணி பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்ற இவ் நடமாடும் சேவையானது காணி ஆணையாளர் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணிக்கான ஆவணங்களை பெறுவது மற்றும் உரித்து படிவம் பெறுவது உள்ளிட்ட விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன.

இதில் பிரதேச பொது மக்கள் காணி தொடர்பான ஆவண விடயங்களை கலந்தாய்வு செய்ததுடன் அவர்களுக்கான உரித்து படிவம் பெறுவது தொடர்பிலும் இதன் போது ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்க, உதவி காணி ஆணையாளர் ஜீ.ரவிராஜன் ,உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *