தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் கையளித்த இராணுவம்

வல்வெட்டித்துறை, பெப்.24

யாழ்.வல்வெட்டித்துறை வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் வியாழக்கிழமை இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வல்வெட்டித்துறை வீதியில் பணப்பை ஒன்று தவற விடப்பட்ட நிலையில் அதனை மீட்ட இராணுவத்தினர் பணப்பையில் ரூ.20 ஆயிரம் பணம், இரண்டு வங்கி அட்டைகள் தேசிய அடையாள அட்டை என்பன காணப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து உரியவர் அடையாளம் காணப்பட்டு பொலிஸார் முன்னிலையில் குறித்த பணப்பை ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *