
வடக்கு மாகாணக் கடலில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் அத்துமீறி
மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் ஹர்மன் குமார தலைமையில் கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை உடனடியாக நிறுத்த வேண்டும், எங்களது கடல் வளத்தை நாமே ஆளே வேண்டும், கடல் வளத்தைச் சூறையாடும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்? என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.