உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ தளவாடங்கள்: ரஷ்யாவுக்கு பொருளாதார தடை!

உக்ரைன் மீதான அறிவிப்புக்கு எதிர்வினையாற்றும் வகையில், ரஷ்யா மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய பில்லியனர்களின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவின் கூடுதல் தொகுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.

தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், தன்னலக்குழுக்கள் பிரித்தானியா நிறுவனங்களையும் சொத்துக்களையும் வாங்குவதைத் தடுக்க சட்டங்களைக் கொண்டுவருமாறு பிரதமரை வலியுறுத்தினார்.

மாஸ்கோ- ஆதரவு பிரிவினைவாதிகளால் நடத்தப்படும், உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரித்த பின்னர், தற்போது இராணுவ நடவடிக்கையை தொடருவதாக அறிவித்தார்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ரஷ்யாவை இறையாண்மைக் கடனை உயர்த்துவதைத் தடுப்போம். நிறுவனங்களை நிதி திரட்டுவதை நிறுத்துவோம் மற்றும் ரஷ்ய நிறுவனங்களை நிறுத்துவோம். சர்வதேசச் சந்தைகளில் ஸ்டெர்லிங் மற்றும் டொலர்களைக் கூட அகற்றுவோம்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *