தீவிரமடையும் மோதல்: ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு!

ஐந்து ரஷ்ய விமானங்களையும் ஒரு ஹெலிகொப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் கூறுகின்றன.

‘அமைதியாக இருங்கள் மற்றும் உக்ரைன் பாதுகாவலர்களை நம்புங்கள்’ என்று உக்ரைன் படைகளின் அறிக்கை கூறுகிறது.

எனினும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது போர் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறுத்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், இராணுவ நடவடிக்கையை அறிவித்த பின்னர், கியேவில் உள்ள பலர் தஞ்சம் அடைய நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு விரைந்துள்ளனர்.

மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேற பேருந்துகளில் ஏறியுள்ளனர், மேலும் வெளியேற முயற்சிக்கும் பலரின் கார்கள் வீதியில் நீண்ட வரிசைகள் நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *