உலக சுற்று சூழல் தினத்தினை முன்னிட்டு யாழில் மர நடுகை…!

உலக சுற்று சூழல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை மற்றும் கடற்கரை சுத்தபடுத்தல் நிகழ்வும் சுழிபுரம் மேற்கில் முன்னெடுக்கபட்டது.

வலி மேற்கு பிரதேச செயலகத்தினால் சுழிபுரம் கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் பசுமைப்புரட்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுழிபுரம் மேற்கு புளியந்துறை கடற்கரையில் தூய்மைப்படுத்தல் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது

இதன் பொழுது சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் , சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *