
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண், ரயில் கடவையை கடக்க முற்பட்ட நிலையில், குறித்த விபத்து இடப்பெற்றதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.