மூன்று மாதங்களுக்குள் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்படும்!

இலங்கையில் மருந்தகங்களிடம் மேலும் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் மருந்து தட்டுப்பாட்டை நாட்டு மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே நாட்டில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு 5 வீதம் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசாங்கம் தலையீடுகளை செய்து மாற்று வழிகளை கையாளவில்லை என்றால், சீமெந்து, எரிவாயு, பால் மா, எரிபொருள் போன்றின் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விளைவுகளை விட மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

மக்களின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலேயே அனைத்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *