மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படாது: வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

கொழும்பு, பெப் 24: எந்த காரணத்துக்காகவும் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படாது என்று வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

“வட மாகாணத்தில் மகாவலி, வன இலாகா திணைக்களம் மூலம் கணிசமான அளவு மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படுகிறது.வடக்கு மாகாணத்தில் சுமார் 44 வீதமான காணிகள் வன இலாகா திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் பல காணிகளை அபகரிப்பதற்கு வன இலாகா திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க “எந்த காரணத்தாகவும், மக்களின் காணிகள் அபகரிக்கப்பட மாட்டாது. மக்களின் நலனே எமக்கு முக்கியம்’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *