
சென்னை, பெப்.25
50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் தினவிழா ராமாபுரம் எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசும் போது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும், விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை, இதை அவர்கள் உணரவேண்டும், நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.