வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின் 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக பாரதி விளையாட்டுக் கழகத்தால் மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த விளையாட்டுக்களின் ஒரு பகுதியாக 19.07.2024 நாளை காலை 07.00 மணிக்கு கடல் விளையாட்டுக்கள் ஆரம்பமாகவுள்ளது.
நீச்சல், தெப்பம் வலித்தல்,படகு ஓட்டம் போன்ற கடல் விளையாட்டுக்கள் பாரதி விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் பாரதி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
குறித்த விளையாட்டுக்களில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் போட்டியாளர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.