மாணவர்களின் இணையவழி கற்றல் பாதிப்பு: ஆசிரியர் சங்கம்

கொழும்பு, பெப்.25

நாடு முழுவதும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக, இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயற்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பல பிரதேசங்களுக்கு வெவ்வேறு நேரங்களில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதால், தொலைதூர பகுதிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையவழி கற்பித்தலில் ஈடுபட முடியவில்லை.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மின்வெட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *