மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் பாதிப்பு

<!–

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் பாதிப்பு – Athavan News

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மின்வெட்டு காரணமாக பிரதேச நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்வெட்டு காரணமாக இதுவரை பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *