கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கு ஏன் வழங்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு முனையம் இந்தியாவில் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆட்சிக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்கமாட்டோம் என அரசாங்கம் கூறினாலும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிழக்கு முனையத்தை விற்பதன் மூலம் அரசாங்கம் இதனை ஆரம்பித்தது.
ஊழியர்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மேற்கு கொள்கலன் முனையம் வரம்பற்ற வரிச் சலுகைகளுடன் 25 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையால் பூர்த்தி செய்யப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய முதலீட்டிற்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.