இலங்கை விவகாரம் ஜெனிவாவில் மார்ச் 3 ஆரம்பம்

ஜெனீவா, பெப்.25

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *