மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்திய நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

நேற்றிரவு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கை மட்டக்களப்பிற்கு கடத்தி வந்த போது குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *