யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நாய் வளர்ப்போருக்கு வருகிறது புதிய நடைமுறை!

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாய் வளர்ப்போர் கட்டாயமாக நாய்களை பதிவு செய்யும் நடைமுறையை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்

இன்றைய தினம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன், மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் யாழ். ஆரோக்கிய நகரம் எனும் தலைப்பிலான கருத்தரங்கத்தில், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாய்களை கட்டுப்படுத்துவதில் யாழ் மாநகர சபை பிரச்சினையை எதிர்நோக்குகிறது. அதாவது தெரு நாய்களை மாநகரசபை பிடித்து வர முடியாது. அதே போல அவற்றை வைத்து பராமரிக்கக் கூடிய சிறந்த இடங்களும் தற்போதைய நிலையில் இல்லை.

ஆனால் நாங்கள் தற்பொழுது ஒரு நடைமுறையினை ஏற்படுத்தவுள்ளோம். வீட்டில் நாய்களை வளர்ப்போர் கட்டாயமாக மாநகரசபையில் அதற்குரிய அனுமதிப்பத்திரத்தை பெற்று வளர்க்க வேண்டும்.

அதேபோல் எதிர்வரும் நாட்களில் தெருவில் உள்ள நாய்களை பிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளளோடு, நாய்க்கு உரியவர்கள் இல்லாதவிடத்து நாய்கள் சரணாலயத்திற்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம். – எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *