உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து   ருமேனியா வழியாக இந்தியர்களை மீட்கும் வகையில் அந்நாட்டிற்கு இரு விமானங்களை இந்தியா அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மும்பை மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் ருமேனியா வரும் 500 இந்தியர்களை முதற்கட்டமாக மீட்டு வர உள்ளதாக கூறப்படுகிறமை குறுப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *