
யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் சற்று முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணியந்தோட்டம் மற்றும் பூம்புகார் பகுதியில் வைத்தே மேற்குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
மணியந்தோட்டத்தை சேர்ந்த நபர், ஹெரோயினை விற்கும் நோக்குடன் யாழ் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார்.
தகவலறிந்த இராணுவ புலனாய்வு பிரிவினர், குறித்த நபரை மறித்து சோதனை செய்து அவரிடமிருந்து ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பூம்புகார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஹெரோயினை மறைத்து வைத்திருத்த நபரும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இளம் சமூகத்தினரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புத்திஜீவிகள் கவலை வெயிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.