12 இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கிளிநொச்சி, பெப்.25

இலங்கையின், கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எஸ்.பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கடந்த 13ஆம் திகதி குறித்த 12 இந்திய மீனவர்களும் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *