நோயாளிகளின் நலம் விசாரித்து ஊடகக் காட்சிகளை வெளியிடுவதைத் தவிருங்கள்! ரவி குமுதேஷ்

சுகாதார அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பல தற்காலிக உடன்படிக்கைகளின் அடிப்படையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

14 நாள் இடைநிறுத்தத்தின் முடிவில் தொழிற்சங்க உறுப்பினர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயாளிகளின் நலம் விசாரித்து ஊடகக் காட்சிகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

மேலும், நோயாளிகளின் நலன் குறித்து தவறான விசாரணைகளை மேற்கொண்ட நபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்ட காலகட்டத்தில் பின்தொடரவில்லை என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் தொடங்கும் போது அத்தகைய நபர்கள் கவலைகளை எழுப்புவதில் அர்த்தமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *