நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 203 ரூபாயாக அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீட்டர் டீசல் 139 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் கடந்த 6ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *