கொரோனா பரவலின் அபாயம் இன்னும் குறைவடையவில்லை; உணர்ந்து செயற்படுங்கள்! சுகாதார தரப்பினர்

கொரோனா தொற்று பரவலின் அபாயம் இன்னும் குறைவடையவில்லை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீகஜானகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒமிக்ரான் மாறுபாடு தொடர்ந்தும் மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மரபணு மாற்றங்களின் ஊடாக ஒருமுறை தொற்றுக்கு உள்ளான நபருக்கு மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவலின் அபாயம் இன்னும் குறைவடையவில்லை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய நிலைமைக்கு அமைய சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அபாயமிக்க தரப்பில் காணப்படும் நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பூஸ்டர் தடுப்பூசிகளின் எண்ணிக்கை பரிந்துரைகளுக்கு அமைய மாறுபடக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *