யாழ்ப்பாணம், பெப்.25
நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் ப. புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது தோரணவாசல் புனருத்தாரணம் செய்யப்பட்ட பின் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான மாதிரிப்படம் யாழ்பாண மரபுரிமை மையத்தினால் வெளியிடப்பட்டது.
