கொழும்பிலிருந்து திருமலை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து! 8 பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெறுள்ளது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *