ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது பங்களாதேஷ் அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 136 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரீட் அஹமட் 2 விக்கெட்டுகளையும் ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் ராஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 307 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 45.1 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா சத்ரான் 54 ஓட்டங்களையும் ரஹமட் ஷா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம், மெயிடி ஹசன், மொஹமதுல்லா, அபீப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 126 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 16 பவுண்ரிகள் அடங்களாக 136 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட லிடொன் தாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறு தினம் சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *