மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது: இலங்கை அரசு

கொழும்பு, பெப் 26: நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மாநில மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில் பல தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாராசிட்டமால் தேவை அதிகரித்துள்ளதால், பாராசிட்டமால் உற்பத்தியை துரிதப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பராசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *