ஒன்லைனில் பெண்களின் முகங்களை நிர்வாண உடல்களுடன் இணைத்து வெளியாகும் புகைப்படங்கள்

இலங்கையில் பதிவாகும் தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினமும் 15-20 முறைப்பாடுகள் தமக்கு கிடைப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூர் சட்ட அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கடந்த ஆண்டு பொலிஸாரினால் விசேட சைபர் குற்ற விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது என்று அஜித் ரோஹன கூறினார்.

மேலும் பெண்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், பெண்களின் முகங்களை நிர்வாண உடல்களாக சித்தரிக்கப்படும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறினார்.

ஆகவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துன்புறுத்தலுக்கு ஆளானால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *