மன்னாரில் இடம்பெற்ற மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டி..!

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு  நேற்றையதினம்(18) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வி.எம்.சி.ரி (V.M.C.T) நிறுவனத்தின் இயக்குநர்  பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினராக மன்னார் உதவி கல்வி பணிப்பாளர் பா.ஞானராஜ் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற குறித்த திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட மாவட்ட செயலாளருக்கு அவரின் மகத்தான சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *