நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 249 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று 1,286 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 643,072 ஆக அதிகரித்துள்ளது.

18,455 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 16,142 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *