
கொழும்பு, பெப் 27: இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலாப் பயணிகள், புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்தார்.