ஜெர்மனியில் குறைந்த வயதில் இரு துறைகளில் சாதித்த தமிழன்

ஜெர்மனியின் வடமேற்கு மாநிலத்தில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று தமிழ் இளைஞனான அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார்.

ஜெர்மனியின் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன் சின்னையா என்ற இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும் பட்டய கணக்காளராக (master low and chartered accountant) குறைந்த வயதில் கல்விப் புலத்தில் சாதனை படைத்துள்ளார்.

அனங்கன் சின்னையாவை கௌரவிக்கும் முகமாக கடந்த 22 ஆம் திகதி ஜெர்மனியின் வடமேல் மாநில நிதி அமைச்சு தனது உத்தியோகபூர்வ இலச்சினை பொறிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச்சயலாளரும் ஜெர்மனியின் இலங்கைக்கான குடிவரவு குடியகல்வு சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவருமான தேசமானிய எம்.டி இராமச்சந்திரனின் ஒரே ஒரு புதல்வர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *