யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இன்று காலை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்போது பெலாரஸ் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் என எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது என லுகாஷென்கோ உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெலன்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பு பெலாரஸ் எல்லையிலிருந்து தொடங்கியதால், அந்நாட்டில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.