
யாழ்ப்பாணம், பெப்.27
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமைமுதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.