வவுனியா ஏ9 வீதியில் விபத்து – இருவர் படுகாயம்

வவுனியா – விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புளியங்குளம் பகுதியில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது அவ் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *