
பாராளுமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு வாரம் மாத்திரமே உள்ளது. சுமார் 60க்கு மேற்பட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கியுள்ளனர். இதனால் அடுத்த பாராளுமன்றத்தில் பல புதிய முகங்களையே காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சிறுபான்மை இனப் பிரதிநிதித்துவமும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.