
கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கான சூழ்ச்சி மிகவும் உக்கிரமடைந்துள்ளது. இதனடிப்படையில் திட்டமிட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறடிக்க முயற்சிக்கப்படுவதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.