
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன. குறித்த தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தார்.