
இலங்கையில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி நடந்து வரும் போதும், டீப் ஸ்டேட் அல்லது நிழல் அரசொன்று மறைமுகமாக செயற்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் முதல் இந்த நிழல் அரசு தொடர்பிலான சந்தேகம் மிகப் பெரும் அளவில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கும் அதன் அச்சுறுத்தல் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.