
நுவரெலியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணிகளில் ஈடுபட்டதாக கூறி 8 இந்தோனேஷியர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், கடந்த திங்களன்று குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்துள்ளமை தொடர்பில் சந்தேகிக்க முடியுமான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.