
2021-.09.-13 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொது பல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி “அல்லாஹ்” என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். மறுநாள் பாராளுமன்றம் முதல் பத்திரிகைகள் வரை அனைத்திலும் இதுதான் தலைப்புச் செய்தி. அந்த சந்தர்ப்பத்தில் இந்த கருத்து போலியானது என்பதை நிரூபித்து இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றி சிங்கள மொழியில் தெளிவுபடுத்துவதற்கான கட்டாய தேவை ஊடவியலாளர்களாகிய எமக்கு ஏற்பட்டது.