சுற்றுலாத்துறையில் இலங்கை மைல்கல்!

2024 ஆம் ஆண்டிற்கான தனது இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை டிசம்பர் 26 ஆம் திகதி வரவேற்கத் தயாராகும் நிலையில், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ளது.

இந்த முக்கிய நிகழ்வு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெறவுள்ளது.

இது தற்போதைய இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்த சாதனையைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு விழாவிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 1,901,988 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *