பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கு அமைவாக, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் மற்றும் தொடர்புடைய உள்ளூர் நீர்வழிகளிலும் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *