
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 103 பேரையும் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பீ. தெஹிதெனிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.