
மியன்மார் அகதிகளை மீளத்திருப்பி அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல எனவும் அவர்கள் முகங்கொடுக்கக் கூடிய அச்சுறுத்தல், உயிராபத்து என்பன தொடர்பில் கவனத்திற்கொண்டு அவர்களை இந்த நாட்டில் தற்காலிமாக தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.