முடக்கப்படும் நிலையில் யாழ்.வடமராட்சி?

யாழ்.வல்வெட்டித்துறை – நாவலடி, கெருடாவில் பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதிகளில் 30 போிடம் நேற்றய தினம் எழுமாற்றாக பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதேவேளை வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 95 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து அங்கு தொடர்ச்சியாக எழுமாற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இவ்வாறு தொற்றாளர்கள் தொடர்ந்தும் அதிகரிப்பதனால் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையே முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *