
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல் ஒன்றில், சட்டத்துக்கு முரணாக பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்ததாக கூறி பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும், வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அழைத்து அங்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.