வடபகுதி மக்கள் கடலட்டை வளர்பு மூலப் பொருட்களை வழங்குவது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை

கொழும்பு, மார்ச் 3:

கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் மூலப் பொருட்களையும் ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கடலட்டைப் பண்ணைகளுக்கான குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள், ஓலைத்தொடுவாயில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்துதல் மற்றும் இறால் பண்ணைகள், பாசி வளர்ப்பு போன்றவற்றில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *