அங்கஜனின் பெயரை பயன்படுத்தி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சியொன்று இடம்பெறுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி, போதையில் வந்த நபரொருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டில் தாக்குதலுக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்றிரவு இடம்பெறுள்ளது.

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்ததோடு தடுக்கமுயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளி தாக்கியதுடன் வீட்டின் கேற்றையும் வேலி தகரங்களையும் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியமையால் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பும் குழப்பநிலை தோன்றியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *