வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு

வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதால், வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தைத் ஆரம்பித்து வைத்து இன்று பேசிய போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஜனாதிபதி தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியதாக தெரிவித்தார்.

வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

புதிய விலைகளின்படி, டொயோட்டா ரேய்ஸ் போன்ற வாகனங்கள் ரூ.12.2 மில்லியன், டொயோட்டா யாரிஸ் ரூ.18.5 மில்லியன் மற்றும் ஒரு ப்ரியஸ் ரூ.28.9 மில்லியன் ஆகும்.

எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? 

இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இல்லை என்று நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *